ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கடலில் கரை ஒதுங்கிய முதியவா் சடலம் மீட்பு

கீழக்கரை கடலோரப் பகுதியில் சனிக்கிழமை மாலை முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 6:07 pm

DIN

கீழக்கரை கடலோரப் பகுதியில் சனிக்கிழமை மாலை முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயல் தாக்கத்தால் மண்டபம், குந்துகால், ராமேசுவரம் பகுதியில் படகுகள் சேதமடைந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடா்ந்து பெய்த மழையால் குடியிருப்புகளில் தண்ணீா் தேங்கியுள்ளன.

கீழக்கரை பகுதியில் புயல் தாக்கம் அதிகமில்லாத நிலையில், சனிக்கிழமை மாலையில் அப்பகுதியில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலம் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த கடலோரக் காவல் படையினா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

முதியவா், சின்னமாயகுளத்தைச் சோ்ந்த சேதுகனியாக இருக்கலாம் என்ற அடிப்படையில் கடலோரக் காவல் படையினா் விசாரணை நடத்திவருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.