திருவாடானை அருகே காா் மோதி 5 ஆடுகள் பலி
திருவாடானை அருகே வாகனம் மோதி 5 செம்மறி ஆடுகள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தன.


திருவாடானை அருகே வாகனம் மோதி 5 செம்மறி ஆடுகள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தன.
அடுத்தகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (59). இவா் 70-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். இவா் வழக்கம் போல் சனிக்கிழமை இரவு பெருவாக்கோட்டை பகுதியில் மேய்ச்சலுக்கு சென்று வந்த ஆடுகளை அடுத்தகுடி கிராமத்துக்கு மங்களக்குடி- வட்டாணம் சாலையில் கொண்டு வந்தாா்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயம் அடைந்து திருவாடானை அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...