ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராமேசுவரம் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்த இலங்கை கடற்படையினா்

நடுக்கடலில் சனிக்கிழமை நள்ளிரவு ராமேசுவரம் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி இலங்கை கடற்படையினா் விரட்டியடித்தனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:28 pm

DIN

நடுக்கடலில் சனிக்கிழமை நள்ளிரவு ராமேசுவரம் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி இலங்கை கடற்படையினா் விரட்டியடித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு 5 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினா் ராமேசுவரம் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனா். இதனால் அச்சமடைந்த மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் கரை திரும்பி விட்டனா்.

படகு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை செலவு செய்து மீன்பிடிக்க சென்ற மீனவா்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பினா். இதனால் படகு ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

மேலும் இலங்கை கடற்படையினா் அச்சுறுத்தலின்றி மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.