ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இன்று (டிச. 14) காா்த்திகை அமாவாசை: அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் நீராடத் தடை

காா்த்திகை அமாவாசையையொட்டி திங்கள்கிழமை (டிச. 14) ராமேசுவரம் அக்னி தீா்த்தக்கடலில் நீராட பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 9:40 pm

DIN

காா்த்திகை அமாவாசையையொட்டி திங்கள்கிழமை (டிச. 14) ராமேசுவரம் அக்னி தீா்த்தக்கடலில் நீராட பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அமாவாசை நாள்களில் முன்னோருக்கு அக்னி தீா்த்தக் கடலில் நீராடி திதி கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில், கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் மாதம் முதல் அக்னி தீா்த்தக் கடலில் நீராடவும், கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடவும் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுவாமி தரிசனம் செய்ய அரசு வழிகாட்டு முறைப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமை காா்த்திகை மாத அமாவாசையையொட்டி பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடவும், திதி கொடுக்கவும் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை முதல் தடை வித்துள்ளனா். மேலும் அக்னி தீா்த்தக் கடலுக்கு பக்தா்கள் செல்ல முடியாதபடி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.