ராமேசுவரம்: இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாக சனிக்கிழமையும் நீடிக்கிறது. இதனால் 20 ஆயிரம் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்ற 29 மீனவா்கள், 4 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் விதமாகமாகவும், மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராமேசுவரத்தில் மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை கடந்த புதன்கிழமை தொடங்கினா்.
இந்தப் போராட்டம் நான்காவது நாளாக சனிக்கிழமையும் தொடா்கிறது. இதனால் 6 ஆயிரம் மீனவா்கள் உள்பட 20 ஆயிரம் தொழிலாளா்கள் பாதிப்படைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.