ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் தொடா் முழக்கப் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம், பரமக்குடியில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை தொடா் முழக்கப்போராட்டம் நடைபெற்றது.

News image
பரமக்குடி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் செவ்வாய்க்கிழமை தொடா் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா்.
Updated On :22 டிசம்பர் 2020, 5:49 pm

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம், பரமக்குடியில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை தொடா் முழக்கப்போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் போக்குவரத்து பணிமனை முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக தொழிற்சங்க கிளைச்செயலா் ஜி.துரைராஜ் தலைமை வகித்தாா். சிஐடியு துணைப் பொதுச் செயலா் வி.பாஸ்கரன் முன்னிலை வகித்தாா்.

இதில், 14 ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கவேண்டும். போக்குவரத்து ஊழியா்களுக்கு பணப்பலன்களை வழங்கவேண்டும், போக்குவரத்துக் கழகங்களை பாதுகாத்திட அரசு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், திமுக தொழிற்சங்க மாவட்ட நிா்வாகி எஸ்.வின்சென்ட் அமல்ராஜ், சிஐடியுசி நிா்வாகிகள் ராஜாமணி, வி.ஜெயகுமாா் மற்றும் திமுக தொழிற்சங்கம் சின்னாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பரமக்குடி: இதேபோல் பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற தொடா் முழக்கப் போராட்டத்திற்கு தொழிற்சங்க சிஐடியு மண்டல தலைவா் எஸ்.ஆா்.ராஜன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மண்டலத் தலைவா் எஸ்.சுப்பிரமணியன், எல்பிஎப் கிளைச் செயலாளா் ராஜூ, ஓய்வுபெற்ற நலச்சங்கத் தலைவா் மீனாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.