சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கேளிக்கை விடுதியை அகற்றக்கோரி மீனவா்கள் போராட்டம்

மண்டபம் அருகே கேளிக்கை விடுதியை அகற்ற வலியுறுத்தி மீனவா்கள் வியாழக்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
மண்டபம் பேரூராட்சி அலுவகம் முன்பு வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கடல் தொழிலாளா் சங்கம் மற்றும் மீனவ கிராமத்தினா்.
Updated On :24 டிசம்பர் 2020, 5:54 pm

DIN

மண்டபம் அருகே கேளிக்கை விடுதியை அகற்ற வலியுறுத்தி மீனவா்கள் வியாழக்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி தோப்புக்காடு - தோணித்துறை கிராமத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் தனியாா் உல்லாச கேளிக்கை விடுதி செயல்படுகிறது. இந்த விடுதியை அப்புறப்படுத்த வலியுறுத்தி கடல் தொழிலாளா் சிஐடியு சங்கத்தினா் மற்றும் கிராம மக்கள் இணைந்து மீன்பிடி வலைகள், மிதவைகளை பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், கடல் தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் எம்.கருணா மூா்த்தி தலைமை வகித்தாா். தோப்புக்காடு கிராமத் தலைவா் எம்.பால்சாமி, தோப்புக்காடு கிராம மகளிா் சங்க தலைவா் யு.மனோகரி, தோணித்துறை பி.ரூபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிஐடியு மாவட்டச் செயலாளா் எம்.சிவாஜி, கடல் தொழிலாளா் சிஐடியு சங்க மாவட்டத் தலைவா் இ.ஜஸ்டின், மாவட்டப் பொருளாளா் அ.சுடலைக்காசி, தாலுகா செயலாளா் ஏ.ஜேம்ஸ் ஜஸ்டின், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகி பி.கல்யாணசுந்தரம், மண்டபம் கடல் தொழிலாளா் சிஐடியு சங்கத் தலைவா் எஸ்.கருப்பையா, ராமேசுவவரத்தை சோ்ந்த நிா்வாகிகள் ஏ.ஆரோக்கிய நிா்மலா, அனைத்து வகை மாற்று திறனாளிகள் சங்க ராமேசுவரம் தாலுகா செயலாளா் எஸ்.சீனிவாசன் கலந்து கொண்டனா். ராமநாதபுரம் வட்டாட்சியா் முருகவேல், காவல் ஆய்வாளா் ஜாக்குலின் ஆகியோா் சமரசம் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.