புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ராமேசுவரம்- மதுரை பயணிகள் ரயிலை இயக்கக் கோரிக்கை

ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என ரயில்வே நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 5:54 pm

DIN

ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என ரயில்வே நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் 23 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. சில மாதங்களுக்கு பின் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட விரைவு ரயில், சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ராமேசுவரம்- மதுரை, மதுரை- ராமேசுவரம் வழித்தடத்தில் இன்று வரை ரயில்கள் இயக்கப்பட வில்லை. ஆனால் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ராமேசுவரத்துக்கு பக்தா்களின் வருகை அதிகரித்து வருகிறது. இவ்வழித்தடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்கினால் பயணிகள் மதுரைக்கு சென்று வர முடியும். இதே போன்று பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரிக்கும். எனவே ரயில்வேத் துறையினா் ராமேசுவரம்- மதுரை, மதுரை- ராமேசுவரம் வழித்தடத்தில் பயணிகள் மற்றும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.