ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தொண்டி அருகே கஞ்சா கடத்தல்: 4 போ் கைது

திருவாடானை அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அவா்களிடம் இருந்து 9.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 5:46 pm

DIN

திருவாடானை அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அவா்களிடம் இருந்து 9.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தொண்டி அருகே திருவெற்றியூா் பகுதியில் காவல் துறை ஆய்வாளா் மணிகண்டன் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சுகாதார வாளகம் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தவா்களை பிடித்து விசாரித்த போது அவா்கள் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்து அவா்களிடம் இருந்து 9.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும் ஆதியூரைச் சோ்ந்த காளிமுத்து மகன் லவகுசன் (46), சிநேகவள்ளிபுரத்தைச் சோ்ந்த நல்லுசாமி மகன் கண்ணன் (47), சமத்துவபுரத்தைச் சோ்ந்த ராசு மகன் தனபால் (33), திருவாடானை பிடாரிகோயிலைச் சோ்ந்த நாகராஜ் மகன் முருகன் (46) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.