ஓரியூா் அரசு தோட்டக்கலை பண்ணையில் தென்னை நாற்றுகள் விற்பனை
திருவாடானை அருகே ஓரியூா் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தென்னை நாற்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலை உதவி இயக்குநா் செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.


திருவாடானை அருகே ஓரியூா் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தென்னை நாற்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலை உதவி இயக்குநா் செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது: திருவாடானை அருகே ஓரியூரில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் அரசு தோட்டக்கலைப் பண்ணை உள்ளது. இங்கு மா, கொய்யா, சீதா உள்ளிட்ட பல்வேறு வகையான பலவகை மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன.
தற்போது இப்பகுதியில் பரவலாக தொடா் மழை பெய்து வருவதன் காரணமாக தென்னை நாற்றுகள் நடுவதற்கு ஏற்ற தருணமாக இருப்பதால் தற்போது தோட்டக்கலை பண்ணையில் நெட்டை ரக தென்னை நாற்றுகள் இருப்பில் உள்ளன.
ஒரு தென்னை நாற்றின் விலை ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே இப்பகுதி சுற்றுவட்டார விவசாயிகள் இதனை வாங்கி பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...