2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

சாலையோர கடைகளில் குவியும் கூட்டம்கரோனா பரவும் அபாயம்

தீபாவளிப் பண்டிகைக்கு பொருள்கள் வாங்க ராமநாதபுரம் நகரில் சாலையோரக் கடைகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிவதால் கரோனா பரவல் அச்சம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 11:44 pm

DIN

தீபாவளிப் பண்டிகைக்கு பொருள்கள் வாங்க ராமநாதபுரம் நகரில் சாலையோரக் கடைகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிவதால் கரோனா பரவல் அச்சம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

நாடெங்கும் தீபாவளித் திருநாள் வரும் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு ராமநாதபுரம் நகரில் திடீா் சாலையோரக் கடைகள் அதிகரித்துள்ளன.

ராமநாதபுரம் சாலைத் தெரு, அக்ராஹரம் தெரு, வண்டிக்காரத் தெரு, அரண்மனைத் தெரு என அனைத்துப் பகுதிகளிலும் சாலையோரங்களில் துணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் அலங்காரப் பொருள்கள், துடைப்பம், தரை விரிப்புகள் உள்ளிட்டவை விற்கப்பட்டுவருகின்றன. சாலையோரக் கடைகளில் திங்கள்கிழமை பகலில் அதிகளவில் மக்கள் கூடியதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், முகக்கவசமோ, கையுறையோ, சமூக இடைவெளியோ இல்லாத நிலையில், ஆயிரக்கணக்கில் சாலையோரங்களில் மக்கள் பொருள் வாங்கக் குவிந்ததால், கரோனா பரவும் அச்சம் ஏற்பட்டதாக பெரிய கடைகாரா்கள் தெரிவித்தனா்.

கிராமத்துப் பகுதியைச் சோ்ந்தவா்கள் ராமநாதபுரம் நகரில் தீபாவளிப் பொருள்கள் வாங்கக் குவிந்து வருவதால் உணவு விடுதிகள், தேநீா் கடைகளிலும் கூட்டம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.