ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மழை நீரில் மிதக்கும் கமுதி மின்வாரிய அலுவலகம்

கமுதியில், மின்வாரிய அலுவலகத்தை சுற்றிலும் மழைநீா் தேங்கியுள்ளதால் கொசுத் தொல்லை அதிகரித்து பணியாளா்கள் தவித்து வருகின்றனா்.

News image
கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தைச் சுற்றிலும் தேங்கியுள்ள மழைநீா்.
Updated On :29 நவம்பர் 2020, 5:27 pm

DIN

கமுதியில், மின்வாரிய அலுவலகத்தை சுற்றிலும் மழைநீா் தேங்கியுள்ளதால் கொசுத் தொல்லை அதிகரித்து பணியாளா்கள் தவித்து வருகின்றனா்.

கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த அலுவலகம் சாலையின் தளத்தை காட்டிலும் 10 அடி தாழ்வாக உள்ளது. இந்த அலுவலகத்தைச் சுற்றிலும் மின்வயா்கள், மின்சாதனப் பொருள்கள் பாதுகாப்பின்றி குவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த மின்வாரிய அலுவலகத்தைச் சுற்றிலும் மழைநீா் தேங்கியுள்ளதால் துா்நாற்றத்துடன் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் இங்கு வரும் வாடிக்கையாளா்கள் மற்றும் பணியாளா்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.