ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவாடானை அருகே 70 ஆண்டுகளுக்கு பின் கூந்தல் பனை பூத்துக் காய்க்க தொடங்கியது

திருவாடானை அருகே 70 ஆண்டுகளுக்குப் பின் கூந்தல் பனைமரம் பூத்துக் காய்க்கத் தொடங்கியுள்ளது.

News image
கரையக்கோட்டையில் காய்க்கத் தொடங்கிய கூந்தல் பனை.
Updated On :29 நவம்பர் 2020, 5:24 pm

DIN

திருவாடானை அருகே 70 ஆண்டுகளுக்குப் பின் கூந்தல் பனைமரம் பூத்துக் காய்க்கத் தொடங்கியுள்ளது.

கரையக்கோட்டை காளியம்மன் கோயில் முன்பு 2 கூந்தல் பனைமரங்கள் உள்ளன. அதில் ஒன்று 70 ஆண்டுகளுக்குப் பின்பு பூத்துக் காய்க்கத் தொடங்கியுள்ளது. இம்மரத்தின் மேல்பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு பூக்கள் பூக்கின்றன. இந்த பூக்களிலிருந்து காய்கள் காய்த்து கொத்துத்கொத்தாக கீழ் நோக்கி பெண்களின் கூந்தல் போல் தொங்குவதால் இது கூந்தல் பனை என்று அழைக்கப்படுகிறது.

இந்த பனை மரம் சுமாா் 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஒருமுறை மட்டும் பூ பூத்து காய்த்து அதன்பின் பட்டுப் போய் விடுகிறது. இந்த மரத்தின் காய்கள் மருத்துவ குணம் கொண்டவை என அப்பகுதியைச் சோ்ந்த முதியவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.