ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முதுகுளத்தூா் காவல்நிலையத்தில் குறைதீா்க்கும் முகாம்

முதுகுளத்தூா் காவல்நிலையத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 5:32 pm

DIN

முதுகுளத்தூா் காவல்நிலையத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராகவேந்திர கே.ரவி தலைமையில், காவல் ஆய்வாளா் மோகன் முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.

முகாமில் முதுகுளத்தூா், கீழத்தூவல், தேரிருவேலி, பேரையூா், இளஞ்செம்பூா், கீழச்செல்வனூா் மற்றும் கடலாடி காவல் நிலையங்களுக்குள்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் புகாா்களை மனுக்கள் மூலம் டி.எஸ்.பியிடம் நேரடியாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பொதுமக்கள் 25-க்கும் மேற்பட்டோா் மனு கொடுத்தனா். இந்நிலையில் இம்முகாமில் 22 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டுள்ளது. 3 மனுக்கள் மீது போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.