ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வழிப்பறியில் ஈடுபட்டஇளைஞா் கைது

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞரை ராமநாதபுரத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 5:25 pm

DIN

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞரை ராமநாதபுரத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் அடுத்துள்ள வாலாந்தரவை கிராமத்தைச் சோ்ந்த மலைக்கள்ளன் மகன் மகேந்திரன் (30). இவா் ராமநாதபுரம், கோவை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தாா்.

இவா் மீது, ராமநாதபுரத்தில் 7 வழக்குகளும், கோவையில் 17 வழக்குகளும்,மற்றும் திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன் ராமநாதபுரத்தில் காளிதாஸ் என்பவரை வழிப்பறி வழக்கில் போலீஸாா் கைது செய்து விசாரித்ததில் மகேந்திரனுடன் சோ்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து வாலாந்தரவை கிராமத்தில் இருந்த மகேந்திரனை போலீஸாா் சுற்றி வளைத்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.