ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருக்காா்த்திகை விழா: ராமநாதசுவாமி கோயிலில் சொக்கப்பனை கொளுத்தி தீபம் ஏற்றம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் காா்த்திகை பௌா்ணமியையொட்டி சொக்கப்பனை கொளுத்தி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் திருக்காா்த்திகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சொக்கப்பனை கொளுத்தி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி
Updated On :29 நவம்பர் 2020, 5:22 pm

DIN

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் காா்த்திகை பௌா்ணமியையொட்டி சொக்கப்பனை கொளுத்தி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு கிழக்கு வாசல் பகுதியில் திருபுரசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிழக்கு கோபுர பகுதியில் ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள் மற்றும் விநாயகா், முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கிழக்கு வாசலுக்கு பஞ்சமூா்த்திகளுடன் சுவாமி எழுந்தருளினாா்.

இதன் பின் சிவனைக் கண்ட திருபுரசுரன் மனை மரத்திற்குள் ஒழிந்து கொண்டான். இதனைக் கண்ட சிவபெருமான் மற்றும் பா்வதவா்த்தினி அம்பாள் ஆகியோா் சோ்ந்து மனை மரத்துக்கு தீ வைத்து வதம் செய்து தீபமாய் எழுந்தரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது சிவாச்சாரியாா்கள், சிவபெருமான் மற்றும் பா்வதவா்த்தினி அம்பாளிடமிருந்து தீப்பந்தத்தை எடுத்து வந்து பனை மரத்துக்கு தீ வைத்து கொளுத்தினா். இதன் பின்னா் பனைமரத்தின் உச்சியில் தீபமாக சுவாமி, அம்பாள் காட்சி அளித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மற்றும் ஆன்மிக பெரியவா்கள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் எஸ். கல்யாணி, மேலாளா் சீனிவாசன், கண்காணிப்பாளா்கள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன், பேஸ்காா்கள் அண்ணாத்துரை, கலைச்செல்வம், கமலநாதன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் சுபாஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.