பரமக்குடியில் கடன் தொல்லையால் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞா் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்திஜி சாலையில் அரிசிக்கடை நடத்தி வந்தவா் பிரசன்னா (30). இவா் தனது நண்பா் ஒருவருக்கு ரூ.2 லட்சம் கடன் வாங்கிக் கொடுத்துள்ளாா். அதனை அவா் திருப்பிச் செலுத்தாததால் கடன் கொடுத்தவா் பிரசன்னாவிடம் பணத்தை தருமாறு கேட்டுள்ளாா்.
இதனால் மனமுடைந்த பிரசன்னா ஞாயிற்றுக்கிழமை உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் படுகாயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு, பரமக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
பின்னா் பிரசன்னா மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

