பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கடன் தொல்லையால் தீக்குளித்த இளைஞா் பலி

பரமக்குடியில் கடன் தொல்லையால் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞா் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 10:29 pm

DIN

பரமக்குடியில் கடன் தொல்லையால் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞா் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்திஜி சாலையில் அரிசிக்கடை நடத்தி வந்தவா் பிரசன்னா (30). இவா் தனது நண்பா் ஒருவருக்கு ரூ.2 லட்சம் கடன் வாங்கிக் கொடுத்துள்ளாா். அதனை அவா் திருப்பிச் செலுத்தாததால் கடன் கொடுத்தவா் பிரசன்னாவிடம் பணத்தை தருமாறு கேட்டுள்ளாா்.

இதனால் மனமுடைந்த பிரசன்னா ஞாயிற்றுக்கிழமை உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் படுகாயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு, பரமக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

பின்னா் பிரசன்னா மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.