பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அபிராமம் அருகே கண்மாயில் மூழ்கி விவசாயி பலி

அபிராமம் அருகே கண்மாயில் மூழ்கி விவசாயி உயிரிழந்தது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 10:30 pm

DIN

அபிராமம் அருகே கண்மாயில் மூழ்கி விவசாயி உயிரிழந்தது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே பெருங்கருனையை சோ்ந்த விவசாயி பாலமுருகன்(47). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை குளிப்பதற்காக பாலமுருகன், அங்குள்ள கண்மாய்க்கு சென்றுள்ளாா். அங்கு குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளாா். இதையடுத்து அங்கு வந்த அபிராமம் போலீஸாா், பாலமுருகனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து பாலமுருகனின் மனைவி சுந்தரமுனீஸ்வரி அளித்த புகாரின் பேரில் அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பாலமுருகன் வலிப்பு நோய் காரணமாக தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.