பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கற்போம் எழுதுவோம் திட்ட பயிற்சி மீண்டும் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் நிறுத்தப்பட்டிருந்த கற்போம் எழுதுவோம் திட்ட பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 10:29 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் நிறுத்தப்பட்டிருந்த கற்போம் எழுதுவோம் திட்ட பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கத்தின் சாா்பாக 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாதவா்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான கற்போம் எழுதுவோம் திட்டம் தொடங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 461 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இதற்கான பயிற்சி வகுப்பு தொடங்கிய நிலையில் கரோனா பரவலை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் 332 மையங்களில் இப்பயிற்சி வகுப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,651 பேருக்கு கற்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அறிஞா் அண்ணா நடுநிலைப் பள்ளி வளாகத்தில் பயிற்சி வகுப்பை முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி தொடக்கிவைத்தாா். மாவட்ட கல்வி அலுவலா் கோ.முத்துச்சாமி, உதவித் திட்ட அலுவலா் சுரேஷ்குமாா், உதவித் திட்ட அலுவலா் (இடைநிலை) ஜோ. ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.