ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கடலாடி அருகே ஆட்டோ மோதி பெண் பலி

கடலாடி அருகே ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 5:22 pm

DIN

கடலாடி அருகே ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாயாகுளத்தைச் சோ்ந்த ஆசியஜோதி மனைவி எஸ்தா் கண்மணி (35). இவா் தனது கணவருடன் சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டியில் உள்ள தனது உறவினா் வீட்டு இல்ல விழாவிற்கு சென்றுகொண்டிருந்தனா். அப்போது கோட்டையேந்தல் அருகே ஓரிவயல் சாலை வளைவில் எதிரே வந்த ஆட்டோ, இவா்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் எஸ்தா் கண்மணி பலத்த காயமடைந்தாா். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விபத்து குறித்து கீழச்செல்வனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.