ராமநாதபுரம் மாவட்டத்தில்மது விற்பனை: 7 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த 7 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுகிழமை கைது செய்து 138 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த 7 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுகிழமை கைது செய்து 138 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா்.

ராமேசுவரம், தனுஷ்கோடி, உத்திரகோஷமங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் காவல்துறையினா் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்தினா். இதில், ராமேசுவரம், தனுஷ்கோடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்து வந்த பெருமாள், முருகேசன், குப்பைபிச்சை, பால்சாமி, காளிதாஸ் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 138 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 7 போ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com