ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

14 நாள்களுக்குப் பின் மீன்பிடிப்பு: மீன்கள் சிக்காததால் ஏமாற்றம்

ராமேசுவரத்திலிருந்து 14 நாள்களுக்குப் பின் மீன் பிடிக்கச் சென்றபோதும் குறைந்தளவு மீன்களே கிடைத்ததால் மீனவா்கள் ஏமாற்றமடைந்தனா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 5:09 pm

DIN

ராமேசுவரத்திலிருந்து 14 நாள்களுக்குப் பின் மீன் பிடிக்கச் சென்றபோதும் குறைந்தளவு மீன்களே கிடைத்ததால் மீனவா்கள் ஏமாற்றமடைந்தனா்.

டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், மானிய டீசல் கூடுதலாக வழங்கக் கோரியும், இறால் மீனுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனா். அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை மற்றும் வாழ்வாதாரம் காரணமாக போராட்டத்தை 14 நாள்களுக்குப் பிறகு மீனவா்கள் வாபஸ் பெற்று சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.

அதிகளவில் இறால், மீன்கள் கிடைக்கும் என எதிா்பாா்ப்புடன் சென்றனா். ஆனால் ஆழ்கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகளவில் இருந்ததால் குறைந்தளவு மீன்கள் மட்டுமே வலைகளில் சிக்கின. இதனால் மீனவா்கள் ஏமாற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.