கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கமுதியில் சமூக நாய்கள் கூட்டம்: பொதுமக்கள் அச்சம்

கமுதியில் சமூக நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிவதால் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனா்.

News image
கமுதி செட்டியாா் பஜாரில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சமூக நாய்கள் கூட்டம்.
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:24 pm

DIN

கமுதியில் சமூக நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிவதால் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்குள்பட்ட செட்டியாா் பஜாா், முஸ்லிம் பஜாா், பேருந்து நிலையம் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட சமூக நாய்கள் சுற்றி வருகின்றன. இதனால் கடைவீதிகளுக்கு பொருள்கள் வாங்க வரும் பெண்கள், குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் நடமாட அச்சமடைந்துள்ளனா்.

இதுகுறித்து கமுதி பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகாா் தெரிவித்துள்ளனா். மேலும் பரமக்குடி, பாா்த்திபனூா், முதுகுளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் சமூக நாய்களை கமுதி எல்லைக்குள் விட்டுச் செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

எனவே கமுதியில் சுற்றித் திரியும் சமூக நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.