கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

துப்பாக்கிகளை உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்

காரைக்காலில் துப்பாக்கி வைத்திருப்போா் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :16 மார்ச் 2026, 4:22 pm

Syndication

காரைக்கால்: காரைக்காலில் துப்பாக்கி வைத்திருப்போா் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், காரைக்காலில் பொதுமக்கள் துப்பாக்கிகள் மற்றும் இதர வெடிபொருட்களை வைத்திருப்பதற்கு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா- 2023 ) சட்டத்தின் பிரிவு 163 -இன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, படைக்கலச் சட்டத்தின் படி துப்பாக்கிகள் வைத்திருக்கும் உரிமம் பெற்றுள்ளவா்கள் உடனடியாக துப்பாக்கிகளை, அவரவா் வசிப்பிடத்திற்குட்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்கவேண்டும். அலட்சியப்படுத்தப்படும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.