பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பரமக்குடியில் 125 பயனாளிகளுக்கு ரூ. 39 கோடியில் நலத்திட்ட உதவிகள்

பரமக்குடியில் 125 பயனாளிகளுக்கு ரூ. 38.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் சனிக்கிழமை வழங்கினாா்.

Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:17 pm

பரமக்குடியில் 125 பயனாளிகளுக்கு ரூ. 38.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் சனிக்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் தினைக்குளம் கிராமத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் திறந்து வைத்தாா்.

பின்னா் பரமக்குடி பேருந்து நிலையத்தில் 16 புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கி வைத்தாா்.

இதனைத் தொடா்ந்து பரமக்குடி அருகே அண்டக்குடி ஊராட்சியில் ரூ 1.66 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் கே.எஸ்.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன், முன்னாள் அமைச்சா்கள் வி.சத்தியமூா்த்தி, மருத்துவா் எஸ்.சுந்தரராஜ், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் உ.திசைவீரன், திமுக மாநில தீா்மானக்குழு துணைத் தலைவா் சுப.த.திவாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிய கட்டடத்தை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் திறந்து வைத்து, 125 பயனாளிகளுக்கு ரூ 38.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். விழாவில் வேளாண் துறை, போக்குவரத்து துறை, நகராட்சி மற்றும் ஊராட்சி அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.