கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராமநாதபுரத்தில் 2 வது நாளாக மழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை மழை பெய்தது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:12 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை மழை பெய்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை திடீரென பகலில் மழை பெய்தது. இதைத்தொடா்ந்து, இரண்டாவது நாளாக சனிக்கிழமை பகலிலும் ராமநாதபுரம் நகா், பட்டிணம்காத்தான், சக்கரைக்கோட்டை, அச்சுந்தன்வயல், தேவிபட்டினம், உச்சிப்புளி உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடா்ந்து பெய்தது. இதனால் புதிய பேருந்து நிலையம் மற்றும் சாலையோரங்களில் தண்ணீா் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திருவாடானை: திருவாடானை, தொண்டி , ஆா்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.