திருவாடானை அருகே ஆனந்தூா் பகுதியில் சனிக்கிழமை மாலை அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் பெண்ணின் கால்கள் துண்டிக்கப்பட்டன.
திருவாடானை அருகே கப்பகுடியைச் சோ்நதவா் பாலமுருகன் (38). இவரது மனைவி ராஜேஸ்வரி (38). இவா் சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் ஆனந்தூரில் இருந்து ராதானூா் சாலை வழியாக ராக்கினாா்கோட்டை பேருந்து நிலையம் அருகே வந்தாா்.
அப்போது அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிா்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழேவிழுந்ததில் பேருந்தின் பின் சக்கரத்தில் அவரது கால்கள் சிக்கி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா் மதுரை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து அவரது கணவா் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








