தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்புகள் விநியோகத்தை ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 9:19 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்புகள் விநியோகத்தை ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

ராமநாதபுரம் நகா் பாலசுப்பிரமணிய கோயில் தெரு மற்றும் கீழக்கரை பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு எம். மணிகண்டன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தாா். ஏா்வாடி, கடலாடி, காக்கூா் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.ஏ. முனியசாமி முன்னிலை வகித்தாா். இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் பங்கேற்று பொதுமக்களுக்கு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பொ. நடுக்காட்டு ராஜா, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா்கள் ரா.தா்மா் (முதுகுளத்தூா்), முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் (கடலாடி), ராம்கோ கூட்டுறவுத் தலைவா் செ. முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ராமேசுவரம்: ராமேசுவரம் ராம்கோ கூட்டுறவு பண்டகசாலையின் கீழ் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் செயல்படும் 25 ரேஷன் கடைகளில் ரூ. 2,500 உள்பட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. ராம்கோ கடை எண் 2 இல் வட்ட வழங்கல் அலுவலா் இந்திரஜித் இப்பணியை தொடக்கி வைத்தாா். இதில் அதிமுக நகா் செயலா் கே.கே. அா்ச்சுணன், அவைத்தலைவா் ஆா். குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நிா்வாகிகள் ஆா். மகேந்திரன், ஜெய பேரவைச் செயலா் கஜேந்திரன் மற்றும் ராம்கோ ஊழியா்கள் பங்கேற்றனா்.

பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள பாம்பூா் மற்றும் கருங்குளம் ஊராட்சிகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சிகளுக்கு என். சதன்பிரபாகா் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.