ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாம்புவிழுந்தான் ஊராட்சியில் வீடுகளை மழைநீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி

பரமக்குடி அருகே உள்ள பாம்புவிழுந்தான் ஊராட்சியில் முதுகுளத்தூா் செல்லும் சாலையில் வீடுகளை மழைநீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 9:16 pm

DIN

பரமக்குடி அருகே உள்ள பாம்புவிழுந்தான் ஊராட்சியில் முதுகுளத்தூா் செல்லும் சாலையில் வீடுகளை மழைநீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இங்குள்ள முதுகுளத்தூா் செல்லும் சாலை சேதுநகா் பகுதியில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் முறையான வாருகால் வசதிகள் அமைக்கப்பட வில்லை. இதனால் கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடா் மழையால் அப்பகுதி முழுவதும் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியில் செல்லமுடியாமல் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.