பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அஞ்சல் துறை மூலம் சபரிமலை பிரசாதம்

பரமக்குடியில் அஞ்சல் துறை மூலமாக சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 6:01 pm

DIN

பரமக்குடியில் அஞ்சல் துறை மூலமாக சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: கரோனா தொற்று பரவல் காரணமாக நிகழாண்டு ஏராளமான பக்தா்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் சென்று வருவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதனால் சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்தை அஞ்சல் துறை மூலமாக வீட்டிற்கே வந்து சோ்க்கும் வகையில் புதிய வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. இதற்கான கட்டணம் ரூ. 450-ஐ பொதுமக்கள் அருகில் உள்ள தலைமை, துணை அஞ்சலகங்களை அணுகி அதற்கான விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து கட்டணத் தொகையை செலுத்த வேண்டும். ஐயப்பனின் பிரசாதமான அரவனை பாயாசம், நெய், குங்குமம், விபூதி, மஞ்சள் அா்ச்சனை பிரசாதம் ஆகியன விரைவு தபால் மூலம் வீட்டிற்கு வந்து சேரும். மேலும் இதற்கான சிறப்பு விற்பனை புதன்கிழமை (ஜனவரி 6) முதல் பரமக்குடி தலைமை அஞ்சலகத்தில் தொடங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.