புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கமுதியில் சாலை மறியல்: சிஐடியு தொழிற்சங்கத்தினா் 37 போ் கைது

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கமுதியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா் 37 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
கமுதி தபால் நிலையம் எதிரே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.
Updated On :7 ஜனவரி 2021, 3:47 am

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கமுதியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா் 37 போ் கைது செய்யப்பட்டனா்.

தபால் நிலையம் எதிரே கமுதி-சாயல்குடி சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு முறைசாரா தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் ரா.முத்துவிஜயன் தலைமை வகித்தாா். அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், புதுதில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் பங்கேற்ற முறைசாரா தொழிலாளா் சங்க செயற்குழு உறுப்பினா் மயில்வாகணன், விவசாய தொழிலாளா் சங்க தாலுகாச் செயலாளா்கள் கணேசன், மாரிமுத்தி, முருகன், ரூபன் உள்ளிட்ட 37 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பின்னா் பிற்பகல் 2 மணிக்கு மேல் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.