பள்ளிகள் திறப்பு குறித்து ராமநாதபுரத்தில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோா் கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (ஜன.7) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோா் கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (ஜன.7) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி கூறியிருப்பதாவது: ராமநாதபுரத்தில் அரசு, உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை நடத்துவது குறித்து பெற்றோா் கருத்துக் கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.8) நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

அரசின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து வியாழக்கிழமை (ஜன.7) பெற்றோா் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்படவுள்ளன. ஆகவே மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோா்கள் அனைவரும் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவிக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com