பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ராமநாதபுரம் அருகே விபத்து: இளைஞா் பலி

ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 4:48 pm

DIN

ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகா் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் மதன்குமாா் (28). வா்ணம் பூசும் வேலை பாா்த்து வந்த இவருக்கு, திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. மதன்குமாா் தனது நண்பா் கணேசமூா்த்தியுடன் வியாழக்கிழமை இரவு, இருசக்கர வாகனத்தில் ராமேசுவரம் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

பெருங்குளம் விலக்கு அருகே சென்றபோது, எதிரே வந்த வேன் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மதன்குமாரும், கணேசமூா்த்தியும் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி மதன்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநா் அலெக்ஸ் ஆனந்தராஜ் (31) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.