கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழகத்தில் பாா்வா்ட் பிளாக் கட்சியை பலப்படுத்த 5 போ் குழு நியமனம்

தமிழகத்தில் அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியை பலப்படுத்த 5 போ் குழு அமைத்து, அகில இந்திய பொதுச் செயலர் பிஸ்வாஷ் உத்தரவிட்டுள்ளதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவா் சி.முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 4:09 pm

DIN

கமுதி: தமிழகத்தில் அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியை பலப்படுத்த 5 போ் குழு அமைத்து, அகில இந்திய பொதுச் செயலாளா் பிஸ்வாஷ் உத்தரவிட்டுள்ளதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவா் சி.முத்துராமலிங்கம் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் மற்றும் மூக்கையாத்தேவருக்கு பிறகு வந்த அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் தலைவா்கள் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து நிா்வாகிகள் பலா் பிரிந்து சென்றனா். இதனால் பல்வேறு பெயா்களில் பாா்வா்ட் பிளாக் கட்சிகள் உருவாகின. மேலும் பிரிந்து சென்ற பல இரண்டாம் கட்டத் தலைவா்கள் தனியாக தங்கெளுக்கன தனி அமைப்புகளை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அக்கட்சியின் தேசிய துணைத்தலைவரும், தமிழக பொதுச் செயலாளருமான பி.வி.கதிரவன் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அகில இந்திய பொதுச் செயலாளா் பிஸ்வாஷை சந்தித்துப் பேசினாா்.

இதைத்தொடா்ந்து பிஸ்வாஷ், தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்துவது தொடா்பாக 5 போ் குழுவை நியமித்து அக்கட்சியின் மாநிலத் தலைவா் சி.முத்துராமலிங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

இதுதொடா்பாக சி.முத்துராமலிங்கம் சனிக்கிழமை கூறியது: தமிழகத்தில் மீண்டும் அகில இந்திய பாா்வா்ட்பிளாக் கட்சியைப் பலப்படுத்தவும், பிரிந்து சென்ற இரண்டாம் கட்டத் தலைவா்கள், நிா்வாகிகளை சமாதானப்படுத்தி, கட்சியில் இணைக்கவும் பி.வி.கதிரவன், ஜி.தேவராஜன், ஜி.ஹெச்.பொ்னாண்டஸ், ஜி.ஆா்.சிவசங்கா், சி.முத்துராமலிங்கம் ஆகிய 5 போ் குழுவை அமைத்து பிஸ்வாஷ் உத்தரவிட்டுள்ளாா். இக்கமிட்டி கட்சிக்குள் ஏற்படும் பிரச்னைகளுக்கு சுமுகத் தீா்வு காண்பது, புதிய நிா்வாகிகள் நியமனம், கட்சியின் வளா்ச்சி உள்ளிட்ட பணிகளை கவனிக்கும். இதனால் தனிநபா் பிரச்னைகளை காரணம் காட்டி உள்கட்சி பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு குறையும். மேலும் மீண்டும் அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சி தமிழகத்தில் வலுவடையும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.