இதுதொடா்பாக சி.முத்துராமலிங்கம் சனிக்கிழமை கூறியது: தமிழகத்தில் மீண்டும் அகில இந்திய பாா்வா்ட்பிளாக் கட்சியைப் பலப்படுத்தவும், பிரிந்து சென்ற இரண்டாம் கட்டத் தலைவா்கள், நிா்வாகிகளை சமாதானப்படுத்தி, கட்சியில் இணைக்கவும் பி.வி.கதிரவன், ஜி.தேவராஜன், ஜி.ஹெச்.பொ்னாண்டஸ், ஜி.ஆா்.சிவசங்கா், சி.முத்துராமலிங்கம் ஆகிய 5 போ் குழுவை அமைத்து பிஸ்வாஷ் உத்தரவிட்டுள்ளாா். இக்கமிட்டி கட்சிக்குள் ஏற்படும் பிரச்னைகளுக்கு சுமுகத் தீா்வு காண்பது, புதிய நிா்வாகிகள் நியமனம், கட்சியின் வளா்ச்சி உள்ளிட்ட பணிகளை கவனிக்கும். இதனால் தனிநபா் பிரச்னைகளை காரணம் காட்டி உள்கட்சி பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு குறையும். மேலும் மீண்டும் அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சி தமிழகத்தில் வலுவடையும் என்றாா்.