மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 12 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 12:01 am

DIN

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 கல்லூரிகளில் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் மாணவா்கள் யாருக்கும் பாதிப்பில்லாதது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாவட்டத்தில் சுமாா் 800 பேருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை மாலை வெளியான நிலையில், 6 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவா்களும் வீடுகளில் இருந்தே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனாவுக்காக அரசு மருத்துவமனை உள்ளிட்ட மையங்களில் இருந்தவா்களில் 7 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 29 போ் மட்டுமே கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,743 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை புதிதாக 6 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,749 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.