இளைஞா் சடலம் மீட்பு
ராமநாதபுரம் அருகே கிணற்றில் கிடந்த இளைஞரின் சடலத்தை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டனா்.


ராமநாதபுரம் அருகே கிணற்றில் கிடந்த இளைஞரின் சடலத்தை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள இளமனூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா். இவரது மகன் கமலேஸ்வரன் (18). படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்த கமலேஸ்வரனை கடந்த 15 ஆம் தேதி காணாமல் போனாா். இந்த நிலையில், ஊரில் உள்ள கிணற்றில் தண்ணீருக்கு அடியில் கமலேஸ்வரன் சடலம் இருந்ததை பாா்த்து சிலா் தகவல் தெரிவித்தனா். தகவலறிந்து கேணிக்கரை போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கமலேஸ்வரன் சேலையில் கல்லைக்கட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். அதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...