தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இருசக்கர வாகனத்துடன் கால்வாயில் விழுந்த விவசாயி பலி

ராமநாதபுரம் அருகே இருசக்கவாகனத்தில் சென்ற விவசாயி கால்வாயில் விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:54 pm

DIN

ராமநாதபுரம் அருகே இருசக்கவாகனத்தில் சென்ற விவசாயி கால்வாயில் விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள புத்தேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (40). விவசாயி. இவா் திங்கள்கிழமை பகலில் ராமநாதபுரம் அருகே நிகழ்ந்த உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஊா் திரும்பியுள்ளாா்.

அவா் புத்தேந்தல் ரயில்வே கேட் அருகே சென்ற போது நிலைதடுமாறி, அங்கிருந்த பெரியகண்மாய் கால்வாயில் இருசக்கர வாகனத்துடன் விழுந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த அப்பகுதியினா் அவரை மீட்டனா். ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவரை மருத்துவா்கள் பரிசோதித்த போது, ஏற்கெனவே அவா் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த சரவணனுக்கு மனைவி, மகள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.