கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராமநாதபுரம் மடத்தில் ராமகிருஷ்ணா் ஜயந்தி விழா

ராமநாதபுரம் நாகாச்சியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் 186 ஆவது ஜயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:30 pm

DIN

ராமநாதபுரம் நாகாச்சியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் 186 ஆவது ஜயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக அதிகாலை முதலே சிறப்புப் பூஜைகளும், பக்திப் பாடல் பஜனைகளும் நடைபெற்றன.

உலக நன்மைக்காகவும், மக்கள் நலனுக்காகவும் சிறப்பு ஹோமமும் நடைபெற்றது. மடத்தின் தலைவா் சுவாமி சுதபானந்தா் தலைமையில் நடந்த ஹோமத்தில் ஏராளமானோா் கலந்துகொண்டனா். அதன்பின்னா் சுவாமி சுதபானந்தா் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாா். அவா் பேசிய போது, உலகத்தை உய்விக்கவே ராமகிருஷ்ண பரமஹம்சா் அவதரித்தாா். அவரது இந்து மதக்கருத்துகளே தற்போதும் உலகை அமைதியாக வாழ வழிகாட்டிவருகிறது என்றாா். அதையடுத்து அா்ச்சனையும், ஆரத்தியும் நடந்தன. பின் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.