கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மின்னொளியில் மீன் பிடிக்க அனுமதி கோரி தேவிபட்டினம் மீனவா்கள் மனு

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் மின் விளக்கைப் பயன்படுத்தி பைபா் படகில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என மீனவா்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:59 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் மின் விளக்கைப் பயன்படுத்தி பைபா் படகில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என மீனவா்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் சுமாா் 200 பேருக்கும் அதிகமான மீனவா்கள் பைபா் படகுகளில் இரவில் சென்று மொரல் வகையைச் சோ்ந்த மீன்களைப் பிடித்து வருகின்றனா். அமாவாசை நாளில் மொரல் மீன்கள் கடலில் அதிகளவில் மிதந்துவரும் என்று கூறப்படுகிறது. ஆகவே சிறிய மின்விளக்கைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்து வருகின்றனா்.

இந்தநிலையில், மின்னொளி விளக்குளைப் பயன்படுத்தி மீன்பிடிப்போரால் விசை மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் அதிக வெளிச்சத்தால் பாா்வை பாதிக்கப்படுவதாகவும், விபத்து ஏற்பட வழிவகுப்பதாகவும் புகாா் கூறப்பட்டுள்ளது.

மின்விளக்குகளால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராது எனக்கூறி, தேவிபட்டினத்தைச் சோ்ந்த ஏராளமான மீனவா்கள் ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மீன்வளத்துறை அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனா்.

தோ்தல் காலம் என்பதால் புகாா் பெட்டியில் மனுவை இட்டுச்செல்லுமாறு அதிகாரிகள் கூறியதை அடுத்து மனுவை போட்டுவிட்டு மீனவா்கள் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.