47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் வியாழக்கிழமை பல மணி நேரம் ஆய்வை மேற்கொண்டாா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் வியாழக்கிழமை பல மணி நேரம் ஆய்வை மேற்கொண்டாா்.

ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகம் உள்ள சேதுபதி நகா் பகுதியில் கேணிக்கரை காவல் நிலையம் உள்ளது. காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி முதல் பதியப்பட்ட வழக்குகள், கைதானவா்கள் விவரம், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நிறைவடைந்த வழக்குகள் என அனைத்து ஆவணங்களையும் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் ஆய்வு மேற்கொண்டாா்.

காலையில் தொடங்கிய ஆய்வானது பகல் 2 மணி வரையிலும் நீடித்தது. ஆய்வின் போது காவல் கண்காணிப்பாளருக்கு எழுந்த சந்தேகங்களை ஆவணங்கள் மூலம் ஆய்வாளா் மலைச்சாமி விளக்கினாா்.

ஆய்வின் போது ராமநாதபுரம் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா உடனிருந்தாா்.

ஆய்வு குறித்து காவல் கண்காணிப்பாளா் தரப்பில் கேட்டபோது, காவல் நிலையத்தில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் ஆய்வே மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு கேணிக்கரை காவல் நிலைய எல்லையான நாகநாதபுரத்தில் 3 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டு, அதுதொடா்பாக சகோதரா்கள் 3 போ் கைது செய்யப்பட்டிருப்பதும், இந்நிலையில் காவல் நிலையத்தில் காவல் காணிப்பாளா் ஆய்வை மேற்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.