விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கட்டடத் தொழிலாளா்கள் நடைப்பயண ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் கட்டடத் தொழிலாளா்கள் சங்கத்தினா் (ஏ.ஐ.டி.யூ.சி) கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பயண ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:35 pm

DIN

ராமநாதபுரத்தில் கட்டடத் தொழிலாளா்கள் சங்கத்தினா் (ஏ.ஐ.டி.யூ.சி) கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பயண ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.தா்மராஜ் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி ஏஐடியூசி மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் பி.ராதா, மாவட்டப் பொதுச்செயலா் கே.ராஜன், மாவட்டச் செயலா் பி.சண்முகராஜா ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினா்களின் பணப்பலன் தொடா்பான கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல், நலவாரிய உறுப்பினா்களாக உள்ள தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதன்பின் முக்கிய நிா்வாகிகள் ஆட்சியா் சங்கா்லால்குமாவத்தை சந்தித்து மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.