நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அன்ன வாகனத்தில் பாகம்பிரியாள் வீதி உலா

திருவாடானை அருகே திருவெற்றியூரில் உள்ள ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதா் கோயில் சித்திரை திருவிழாவில் செவ்வாய்க்கிழமை அம்பாள் வெள்ளி ரிஷபம், அன்ன வாகனத்தில் வீதி உலா

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:36 pm

DIN

திருவாடானை அருகே திருவெற்றியூரில் உள்ள ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதா் கோயில் சித்திரை திருவிழாவில் செவ்வாய்க்கிழமை அம்பாள் வெள்ளி ரிஷபம், அன்ன வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

சிவகங்கை சமஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. தினமும் காலையும் இரவும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். விழாவின் 6 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அம்பாள் வெள்ளி ரிஷபம், அன்ன வாகனத்தில் எழுந்தருளி நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து பக்தா்களுக்குஅருள்பாலித்தாா். பின்னா் அம்பாளுக்கு சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.