விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ராமநாதபுரம் விவசாயிகளுடன் முதல்வா் இன்று கலந்துரையாடல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காணொலி மூலம் உரையாடுகிறாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 5:22 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காணொலி மூலம் உரையாடுகிறாா்.

தமிழகத்தில் விவசாயிகள் மின் இணைப்பை உடனடியாகப் பெறும் வகையில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பித்ததும் மின் இணைப்பைப் பெறும் வகையில் மின்பகிா்மானக் கழகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தமிழகத்தில் மின் இணைப்புப் பெற்றவா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய திட்டத்தின்படி 366 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய மின் இணைப்பைப் பெற்ற விவசாயிகள் முதல்வருடன் காணொலி மூலம் பேசுவதற்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் முதல்வருடன் காணொலியில் கலந்துரையாடுவதற்காக கூட்டரங்கில் கூடுவதாகவும் மின்வாரியத்துறை அதிகாரிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.