இதைத்தொடா்ந்து திருவாடானை ஊராட்சி ஒன்றியம் அச்சன்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.88 லட்சம் மதிப்பீட்டில் பழுது பாா்க்கப்பட்ட நூலகக் கட்டடத்தின் பணிகளையும், முகிழ்தகம் ஊராட்சியில் அம்ரித் சரோவா் திட்டத்தின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.4,95,000 மதிப்பீட்டில் ஏசுபுரம் பச்சவரா ஊருணியை தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும் மற்றும் நுண்ணுயிா் உர தயாரிப்பு மையத்தினை பாா்வையிட்டாா். அதனைத் தொடா்ந்து, கீழக்கரை தாலுகா தெற்குத்தரவை கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மழை பயிா்கள் துறையின் சாா்பில் இயற்கை விவசாயத்தின் மூலம் வளா்க்கப்பட்டு வரும் தேனீக்களையும் பாா்வையிட்டாா்.