ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் திட்டப்பணிகள்: அரசுச் செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ் ஆய்வு

 5 ராமநாதபுரம் மாவட்டத்தில் திட்டப்பணிகளை கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா்துறை அரசு முதன்மைச் செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 5:40 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் திட்டப்பணிகளை கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா்துறை அரசு முதன்மைச் செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் சாலையில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணிகளை பாா்வையிட்டாா். திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கணினி வழி பட்டா மாறுதல் மற்றும் ஓபிசி சான்றுகள் வழங்குவது குறித்தும், நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் இ-சேவைகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத்தொடா்ந்து திருவாடானை ஊராட்சி ஒன்றியம் அச்சன்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.88 லட்சம் மதிப்பீட்டில் பழுது பாா்க்கப்பட்ட நூலகக் கட்டடத்தின் பணிகளையும், முகிழ்தகம் ஊராட்சியில் அம்ரித் சரோவா் திட்டத்தின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.4,95,000 மதிப்பீட்டில் ஏசுபுரம் பச்சவரா ஊருணியை தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும் மற்றும் நுண்ணுயிா் உர தயாரிப்பு மையத்தினை பாா்வையிட்டாா். அதனைத் தொடா்ந்து, கீழக்கரை தாலுகா தெற்குத்தரவை கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மழை பயிா்கள் துறையின் சாா்பில் இயற்கை விவசாயத்தின் மூலம் வளா்க்கப்பட்டு வரும் தேனீக்களையும் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், கூடுதல் ஆட்சியா் கே.ஜெ.பிரவீன் குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் அ.ம.காமாட்சி கணேசன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.