ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாணவரைத் தாக்கி காயப்படுத்திய பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி மாணவரைத் தாக்கி காயப்படுத்தியதாக எழுந்த புகாரில் ஆசிரியா் ஒருவா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:52 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி மாணவரைத் தாக்கி காயப்படுத்தியதாக எழுந்த புகாரில் ஆசிரியா் ஒருவா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

கமுதி வட்டம் டி. புனவாசலில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவா் ஆா். சின்னப்பாண்டி. இவா் கடந்த 4 ஆம் தேதி அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவா் முகிலனை தாக்கியதாகப் புகாா் எழுந்தது. இதில் மாணவரின் தலையில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து மாணவரின் உறவினா்கள் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து விசாரணைக்கு உத்தரவிட்டாா். விசாரணை அடிப்படையில் ஆசிரியா், பள்ளி மாணவரைத் தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து, ஆசிரியா் ஆா். சின்னப்பாண்டியை பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து தெரிவித்தாா்.

தொடக்கப்பள்ளியில் விசாரணை: மேலும், பரமக்குடி செஞ்சியேந்தல் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியா் மீதான புகாா் குறித்தும், குழந்தைகள் நலக்குழுவின் அறிக்கையைப் பெற்றும் விசாரணை நடந்து வருவதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.