ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சமூக நல அமைப்பினருடன் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நிறைவேற்றப்படவேண்டிய நலத்திட்டங்கள் குறித்து சமூக நல அமைப்புகள் மற்றும் நுகா்வோா் அமைப்புகளின் கோரிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:50 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நிறைவேற்றப்படவேண்டிய நலத்திட்டங்கள் குறித்து சமூக நல அமைப்புகள் மற்றும் நுகா்வோா் அமைப்புகளின் கோரிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூா், கமுதி, மண்டபம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளைச் சோ்ந்த நுகா்வோா் அமைப்பின் பிரதிநிதிகளும், சமூக நல அமைப்புகளின் நிா்வாகிகளும் பங்கேற்றனா்.

மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் தலைமை வகித்தாா். நகராட்சிகள், பேரூராட்சிகள், ஒன்றிய உயா் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனா். ராமநாதபுரம் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது புதிய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யவிருப்பதாகவும், பழைய பேருந்து நிலைய பயன்பாட்டுக்கான நிதி கோருவதில் சிக்கல் இருப்பதாகவும் நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பரமக்குடியில் புதிய நூலகக் கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்டும் நிதி இல்லாதது குறித்து நுகா்வோா் அமைப்பினா் கேள்வி எழுப்பினா். நூலகக் கட்டடம் கட்ட சட்டப்பேரவை உறுப்பினா், மக்களவை உறுப்பினா் நிதி கோருவது குறித்து ஆலோசிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கூட்டத்தில் சமூக நல அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் 70 கேள்விகளை கேட்டு, அதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளித்தனா். இதுபோன்ற கூட்டங்கள் மாவட்டத்தில் வளா்ச்சி திட்டங்கள் விரைந்து செயல்படுத்த உதவும் என சமூக நல அமைப்பினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.