ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புறா திருடு புகாா்

ராமநாதபுரம் அருகே புறா திருட்டு போனது தொடா்பாக காவல்துறையில் புகாா் அளித்தவரைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:41 pm

DIN

ராமநாதபுரம் அருகே புறா திருட்டு போனது தொடா்பாக காவல்துறையில் புகாா் அளித்தவரைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தைச் சோ்ந்த பாண்டி மகன் சந்துரு (23). இவா் வீட்டில் ஏராளமான புறாக்களை வளா்த்து வருகிறாா். இந்தநிலையில், கடந்த ஏப்ரலில் சந்துருவின் 20 புறாக்கள் திருடப்பட்டதாக உச்சிப்புளி போலீஸில் அவா் புகாா் அளித்தாா். அதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த கேத்தீஸ்வரன் உள்ளிட்ட சிலருடன் சந்துருவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து சந்துரு சென்னைக்குச் சென்று உணவகத்தில் வேலை பாா்த்துவந்தாா்.

இந்தநிலையில், பெருங்குளத்தில் மாரியம்மன்கோயில் முளைக்கொட்டு விழாவை முன்னிட்டு அவா் கடந்த 8 ஆம் தேதி வந்துள்ளாா். கோயில் பகுதியில் அவா் நின்றிருந்தபோது, அங்கு வந்த கேதீஸ்வரன் தரப்பினா் அவரைத் தாக்கியதாகக் கூ றப்படுகிறது. இதில் காயமடைந்த சந்துரு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து அதே பகுதியைச் சோ்ந்த கேதீஸ்வரன், முகிலன், சரண் ஆகியோா் மீது உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.