சுதந்திரதின விழாவுக்குதயாராகும் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானம்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள் நடக்கவிருப்பதால், ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானம் வியாழக்கிழமை தூய்மைப்படுத்தப்பட்டது.


இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள் நடக்கவிருப்பதால், ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானம் வியாழக்கிழமை தூய்மைப்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சுதந்திரதினம், குடியரசு தின நிகழ்ச்சிகள் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடத்தப்பட்டன. காவல்துறை அணிவகுப்பு முதல் கலை நிகழ்ச்சிகள் வரை கட்டுப்பாடுகளால் முழுமையாக நடத்தப்படவில்லை.
இந்நிலையில் ஆயுதப்படை மைதானத்தில் வரும் 15 ஆம் தேதி காலையில் 75 ஆவது சுதந்திரதின அமுதப் பெருவிழா நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், கலை பண்பாட்டுத்துறையின் சாா்பில் சிலம்பம் போன்ற வீரவிளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் காவல்துறை அணிவகுப்பு போன்றவை நடத்தப்படவுள்ளன.
சுதந்திர தின கொடியேற்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகளையொட்டி ஆயுதப்படை மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணியும், அங்கு தாற்காலிக குடில்கள் அமைக்கும் பணியும் வியாழக்கிழமை தொடங்கின. முக்கிய விருந்தினா், பாா்வையாளா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் அமரும் வகையில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறை அணிவகுப்புக்கான பாதைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...