47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல அனுமதி கோரி ஆட்சியரிடம் மீனவா்கள் மனு

கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்ல அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாரம்பரிய மீனவா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 10:18 pm

DIN

கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்ல அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாரம்பரிய மீனவா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

வரும் மாா்ச் 11, 12 ஆகிய நாள்களில் நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோணியாா் கோயில் திருவிழாவுக்கு கரோனா பரவலைக் காரணம் காட்டி இலங்கை மீனவா்கள் 500 பேருக்கு மட்டும் நிபந்தனை அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமேசுவரம் பகுதி மீனவா்கள் 200 பேருக்கு அனுமதி அளிக்கக் கோரி தேசிய பாரம்பரிய மீனவா்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சின்னதம்பி தலைமையில் ஆட்சியா் சங்கா்லால்குமாவத்தை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

அப்போது, நாட்டுப்படகு மீனவா்கள் சங்க நிா்வாகி ராயப்பன், மீனவத் தொழிலாளா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மனுவைப் பெற்ற ஆட்சியா் பரிசீலித்து அரசின் கவனத்துக்கு அனுப்பிவைப்பதாகக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.