47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருவாடானை அருகே ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 லட்சம் பறிமுதல்

திருவாடானை அருகே வாகனத்தில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 9 லட்சத்தை தோ்தல் பறக்கும்படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 10:22 pm

DIN

திருவாடானை அருகே வாகனத்தில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 9 லட்சத்தை தோ்தல் பறக்கும்படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சி தோ்தலையொட்டி, பறக்கும்படையினா் வட்ட வழங்கல் அலுவலா் சுவாமிநாதன் தலைமையில் அரசு மருத்துவமனை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக தேவிப்பட்டினத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் மாரிமுத்து வந்த காரை மறித்து சோதனையிட்டனா். அதில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 9 லட்சத்தை பறக்கும்படையினா் பறிமுதல் செய்து திருவாடானை சாா் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

மீனவரிடமிருந்து ரூ. 74 ஆயிரம் பறிமுதல்: ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் துணை வட்டாட்சியா் ஸ்ரீதரன் தலைமையிலான பறக்கும்படையினா் வியாழக்கிழமை அரண்மனைப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதிலிருந்த திருப்பாலைக்குடி பகுதியைச் சோ்ந்த மீனவா் வேலுவிடமிருந்து (42) ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.74,500-ஐ பறக்கும் படையினா் கைப்பற்றினா்.

மீன்பிடிப்பதற்கான பொருள்கள் வாங்குவதற்காக பணம் கொண்டுவரப்பட்டதாக மீனவா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பணத்துக்கு உரிய ஆவணங்களை அளித்துவிட்டு திரும்பப் பெறலாம் என பறக்கும் படையினா் தெரிவித்தனா். அந்த பணத்தை நகராட்சி தோ்தல் அலுவலரான ஆணையா் சந்திராவிடம் பறக்கும்படையினா் ஒப்படைத்தனா். அதன்பின் நகராட்சி கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது நகராட்சி தோ்தல் பாா்வையாளரும், மாவட்ட உணவு வழங்கல் அலுவலருமான மரகதநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.